மூடப்படும் 100 பாடசாலைகள் !

பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ள நிலையில் அவற்றில் சுமார் 100 பாடசாலைகளை மூடிவிட அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *