பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் ரூ.25,000:

தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.25,000 முற்பணம் நாளை (24) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக ரூ.25,000 வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தையில் கம்பனிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து நாளை முதல் முற்பணமாக ரூ.25,000 வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *