ஈழவர் ஜனநாயக முன்னணி(EROS) வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு:

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி(EROS) வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். 

தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையினை தக்க வைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.

பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *