குருந்தூர்மலை பௌத்த விகாரை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகினர்.

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது.குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அது தொடர்பான வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *