கூட்டமைப்பினருடன் உலகத் தமிழர் பேரவையினர் சந்திப்பு!

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த உலகத் தமிழர் பரவையின் உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன் போது இமாலய பிரகடனம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த உலகத் தமிழர் பேரவையினர் மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் விசேட சந்திப்பை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *