100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *