வாக்களித்தவுடன் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறும், காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு கைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

இதேவேளை, வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாகச் சொன்னால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *