வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி  விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்றுள்ளது. 

யாழில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *