கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி மீதும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றுக் (14) காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.