வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார்.

யாழில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்று(24)  இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இன்றைய தினம் சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களைப்  பதிவு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி , உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *