யாழ், நாவற்குழியில் விபச்சார விடுதி – நால்வர் கைது:

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில், புகையிரத நிலையத்திற்கு  அருகாமையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரான 68 வயதுடைய நபர் மற்றும்  அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த  40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *