யாழில் – நுரையீரலில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில்  நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில், யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருட்களை  நுகர்ந்த 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *