மூன்று (3) வாரங்களில் மட்டும் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவு – மூவர் மரணம்!

இந்த வருடத்தில் முதல் மூன்று (3) வாரங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இத்தகவலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 1,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத் தகவல் தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 1,536 வழக்குகளும் கம்பஹா மாவட்டத்தில் 637 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு போதாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *