மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவையினர் இமாலய பிரகடனம் சமர்ப்பிப்பு:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்துள்ளது.

உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் இமாலய பிரகடனத்தை குறித்த குழுவினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

இந்த சந்திப்பு உலகத் தமிழ் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *