புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) வெள்ளிக்கிழமை முதல் அமுல்!

ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மேலும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *