பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (20) நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் .

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு வாசலில் சுமார் 20 வைத்தியர்கள் ஒன்று கூடி ஒரு மணித்தியாலம் வரையில் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர் .

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச வைத்திய சேவையை முடக்காதே, முறையற்ற வரி சம்பள வெட்டுக்களால் வைத்தியர்களை துரத்தாதே, நெருப்பு விலையில் மருந்து வேண்டாம், தரம் குறைந்த மருந்துகளை வழங்காதே, அடிப்படை மருந்துகள் உபகரணங்களை உறுதிப்படுத்து ஆகிய கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *