தொலைத்தொடர்பு சட்டமூலம் அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையது அல்ல-சபாநாயகர்!

தொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு ஏற்ப இல்லை என்றும், உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி திருத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், சில திருத்தங்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *