தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் காரணமாக 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 மீனவர்களை கைதுசெய்ததோடு அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் கையகப்படுத்தியமையை கண்டித்தும், குறித்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரியுமே மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *