ட்றம் குத்துக்கரணம் – உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா!

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது.

ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

ஒரு வாரகாலத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து விலகி டிரம்ப் நிர்வாகம் புதிய நிலைப்பாட்டையெடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க உக்ரைன் ஜனாதிபதிகள் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவதை இடைநிறுத்தியிருந்தது.

சவுதி அரேபியாவில் உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளிற்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ யுத்த நிறுத்தம் குறித்த திட்டத்தை அமெரிக்கா ரஸ்யாவிற்கு தெரிவிக்கும், என தெரிவித்துள்ளார்..

பேச்சுவார்த்தை மேசையில் என்ன உள்ளது என்பதை அவர்களிற்கு தெரிவிக்கப்போகின்றோம்,உக்ரைன் துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளிற்கு தயார்,இனி ரஸ்யாவே ஆம் அல்லது இல்லை என தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமாதான திட்டத்தினை ரஸ்யா ஏற்க மறுத்தால் சமாதானத்திற்கான உண்மையான தடை என்னவென்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *