ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கார் மீட்கப்பட்டமை  தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *