ஜெர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி ரணில்:

ஜேர்மனியில் நடைபெறும் பெர்லின் குளோபல் அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மனிக்கு பயணமானார்.

கட்டார் எயார்வேஸ் விமானமான கியூ.ஆர். 659 இல் ஜனாதிபதி உட்பட 12 பேர் கொண்ட தூதுக்குழு கட்டாரின் டோஹாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

கியூபாவில் நடைபெற்ற ஜி77 மற்றும் சீன உச்சி மாநாடு, அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது அமர்வில் கலந்துகொண்டதை அடுத்து கடந்த 24 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த ஜனாதிபதி இன்றுஅதிகாலை ஜேர்மனிக்கு பயணமானார்.

இதேவேளை, நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கைக்கு வழங்கிய முதலாவது கடன் மீளாய்வு தொடர்பாக ஜனாதிபயுடன் நேற்று இறுதிக் கலந்துரையாடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *