ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு!

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என கருதி ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் விநியோகம் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவை இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *