சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்- நாளை கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய மருத்துவ அதிகாரிக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் மருத்துவமனையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு முன்பாக காலை 8 மணியளவில் கூடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரம் தென்மராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனை பதில் மருத்துவ அதிகாரி ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *