கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு – மயிரிழையில் காயத்துடன் உயிர் தப்பிய நபர்!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவராவார்.

அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *