இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 இந்திய படகுகளையும், அதிலிருந்த 16 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்துள்ள கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *