யாழில் அறிமுகமாகும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைத் திட்டம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை  மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனமானது இத்திட்டத்துக்கான கண்வில்லைகளையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், அரியாலை நாவலடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இலவச கண்பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் அதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு  சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *