மாத்தறையில் பாடசாலை ஒன்றிலிருந்து துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் மீட்பு!

மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 21 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.அத்துடன், வேறு வகையான 136 தோட்டாக்கள் மற்றும் 2 டெட்டோனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *