பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைக்கு!

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும், பொதுமக்கள் தினம் அமுல்படுத்தப்படுகின்றது.

வெள்ளிக்கிழமைகள் தோறும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளில், ஏற்படும் தேவையற்ற அசௌகரியங்கள், கால தாமதம் உள்ளிட்ட முறைப்பாடுகளை, இந்த பொதுமக்கள் தினத்தில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *