இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் விதித்தது புத்தளம் நீதிமன்று!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர்.

அவர்களை  புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது  நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  10 மீனவர்களும்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இந்த 10   மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கமைய , 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *