இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் – 2000 பேர் உயிரிழப்பு!

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 676 பேர் பாதசாரிகள் ஆவர்.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் பதிவான 2,200 வீதி விபத்துக்களில் 2,557 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *